Pages

இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரம் வாய்ந்தது : விக்ரம் சரபாய்



ந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரம் வாய்ந்தது என, விக்ரம்  சரபாய் விண்வெளி மையத்தின் துணை இயக்குனர் ஜான்  சச்சரயாஹ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


 விண்வெளி ஆய்வுத் திட்டங்களை, வெளிநாட்டு உதவி இல்லாமலேயே நிறைவேற்றும் அளவுக்கு, இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் திறன் படைத்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.


செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில், இந்தியா, கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்று விட்டதாக, சச்சரயாஹ் குறிப்பிட்டார். 



வெளிநாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் செயற்கைக் கோள் திட்டங்கள் பெரும்பாலானவை.

இரு நாடுகளும் பலன் பெறும் வகையில் நிறைவேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



விண்வெளித் துறையில் ஆய்வாளராக ஆற்றிய பங்களிப்பிற்காக, கோயம்புத்தூரில், தமக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்ச்சியின் ஏற்புரையில், ஜான்  சச்சரயாஹ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
[Read More...]


ரஷ்ய விண்கலம் பூமியில் மோதும் அபாயம்!



                                                    
                                  செவ்வாய் கிரகத்தின் துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது.

                                                                                                                   
  
                     200 கிலோ   எடையுள்ள இந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதால், பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. பூமியின் உட்காற்று பாதைக்குள் நுழையும் போது அந்த விண்கலமானது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவ்வாறு சிதைவடையும் துண்டுகள் பூமியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.





இந்த நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதியிலிருந்து 19-ந் தேதிக்குள் நடைபெறும் என ரஷ்யாவின் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியை நெருங்கும் போது அதன் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள் மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets