Pages

அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு










"அதிசய மனிதர்", "விஞ்ஞான மேதை" என்று புகழப்பட்டவர் ஜி.டி.நாயுடு. கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு வழங்கினார்.
 
கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் 31_3_1894_ல் ஜி.டி.நாயுடு பிறந்தார். அவருடைய தந்தை பெயர் கோபால் நாயுடு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பிறகு மாமனார் வீட்டில் வளர்ந்தார். ஆனால் அங்கு அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை.
 
எனவே, அவரது கவனம் தொழில் துறையில் திரும்பியது. வாலிப வயதில் மருந்து வியாபாரம் செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிள் "மெக்கானிக்" காக வேலை பார்த்து வந்தார். தனது விடாத முயற்சியாலும், தொழில் நுட்ப திறமையாலும் விரைவில் பஸ் அதிபர் ஆனார். அவரது முதல் பஸ் பழனிக்கும் _ பொள்ளாச்சிக்கும் இடையே ஓடியது. அதை ஓட்டிய டிரைவரும் அவரே.
 
பிறகு படிப்படியாக முன்னேறி பல தொழிற்சாலைகளை நிறுவினார். பல புதிய இயந்திரங்களையும், விஞ்ஞான கருவிகளையும் கண்டுபிடித்தார். ஜி.டி.நாயுடு பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார். ஜெர்மன் சென்றிருந்தபோது, ஹிட்லரை சந்தித்துப் பேசினார். வெளிநாட்டு தொழில் நுட்ப திறன்களை நேரில் கண்டறிந்து, அதைப்போன்ற தொழில் நுட்ப கருவிகளை உருவாக்கினார்.
 
அப்படி அவர் உருவாக்கிய தொழில் கருவிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கோவையில் விஞ்ஞான கூடமாக அமைத்தார். இது இன்று எல்லோரும் கண்டுகளிக்கும் காட்சிக் கூடமாக இருக்கிறது. குறைந்த விலையில், ஒரே நாளில் வீடு கட்டி முடித்துக் காட்டியது அவரது சிக்கன திறனுக்கும், தொழில் திறமைக்கும் எடுத்துக்காட்டு ஆகும்.
 
தொழில் மேதையான ஜி.டி.நாயுடு, விவசாயத் துறையிலும் வல்லவர். அவர் கண்டுபிடித்த பப்பாளி மரங்கள், பூசணிக் காய் அளவுள்ள பப்பாளிக்காய்களை கொடுத்தது. அதோடு அவர் கண்டு பிடித்த அவரைச்செடி, மரம் போல் வளர்ந்து நல்ல பலனை தந்தது.
 
அதிகப் படிப்பு படிக்காமலேயே, பல அரிய காரியங்களை ஆற்றி "அதிசய மனிதர்" என்று பெயர் பெற்றார். இவருக்கு சித்த வைத்தியத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. சித்த வைத்திய ஆராய்ச்சியும் செய்து வந்தார்.
 
ஜி.டி.நாயுடு போட்டோ கலையில் அதிக விருப்பம் உள்ளவர். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், மேல் நாட்டு வகையைச் சேர்ந்த சிறிய காமிராவால், அவரே படம் எடுத்து விடுவார். இவரது பிரசிடெண்டு ஹாலில் பெரிய _ பெரிய போட்டோக்கள் நிரம்பி உள்ளன.
 
தனது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கவில்லை என்பதற்காக, 1953_ல் சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, மறைந்த ஈ.வெ.ரா. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் முன்னிலையில் ரேடியோக்களையும் மற்றும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து நொறுக்கி பரபரப்பை உண்டாக்கினார்.
 
ஜி.டி.நாயுடுவுக்கு செல்லம்மாள், ரெங்கநாயகி என்று 2 மனைவிகள். முதல் மனைவிக்கு கிட்டம்மாள், சரோஜினி என்ற 2 மகள்களும், 2_வது மனைவிக்கு கோபால் என்ற ஒரே மகனும் பிறந்தார்கள். ஜனாதிபதி வி.வி.கிரியும், மறைந்த தலைவர் பெரியாரும் நண்பர்களாக இருந்தார்கள்.
 
1973_ம் ஆண்டு இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்தக்கொதிப்பி னாலும், வாத நோயினாலும் அவதிப்பட்டார்.
 
இதற்காக வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார்.
 
ஜி.டி.நாயுடு உடல் நலம் இல்லாமல் இருப்பதை அறிந்த ஜனாதிபதி வி.வி.கிரி, மனைவி சரசுவதி அம்மாளுடன் கோவைக்கு வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் ஜி.டி.நாயுடு பேசினார்.
 
4_1_1974 அன்று அதிகாலையில் ஜி.டி.நாயுடு உடல் நிலை மோசம் அடைந்தது. நினைவு இழந்தார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 9_45 மணி அளவில் ஜி.டி.நாயுடு மரணம் அடைந்தார். உயிர் பிரிந்தபோது மனைவி ரெங்கநாயகி, மகன் கோபால், மகள்கள் கிட்டம்மாள், சரோஜினி, மருமகள் சந்திரலேகா ஆகியோர் அருகில் இருந்தார்கள்.
 
ஜி.டி.நாயுடுவின் உடல் அவர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பிலும், முதல்_அமைச்சர் கருணாநிதி சார்பிலும் ஜி.டி.நாயுடு உடல் மீது மாவட்ட கலெக்டர் சிவகுமார் மலர் வளையம் வைத்தார். தொழில் அதிபர்கள் ஜி.கே.சுந்தரம், ஜி.கே.தேவராஜ×லு, ஜி.ஆர்.கோவிந்தராஜ×லு, பி.ஆர்.ராம கிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
 
மாலையில் அவருடைய உடல் அலங்கரிக்கப்பட்ட தேரில் அவருடைய வீட்டுக்கு எதிரே உள்ள "பிரசிடெண்டு மண் டப"த்துக்கு கொண்டு போகப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர வடிவேலு, கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ரெங்கசாமி, பழைய மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
 
பிரசிடெண்டு மண்டபத்தில், "சிதை" அடுக்கப்பட்டு இருந்தது. அதன் மீது, உடல் வைக்கப்பட்டது. சடங்குகள் நடந்த பின் "சிதை"க்கு, ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால் தீ மூட்டினார். தகனம் நடந்த இடத்தில் ஜி.டி.நாயுடுவுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.
 
ஜி.டி.நாயுடு மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, கவர்னர் கே.கே.ஷா, முதல்_அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்_அமைச்சர் பக்தவச்சலம், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), ராமையா (இ.காங்), ராமமூர்த்தி (இ.கம்ï), எம்.கல்யாணசுந்தரம் (வ.கம்ï), ஜி.கே.சுந்தரம் (சுதந்திரா கட்சி), தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். ஜனாதிபதி வி.வி.கிரி தனது அனுதாப செய்தி யில் கூறியிருந்ததாவது:-
 
40 ஆண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். புதிய விஞ்ஞான கருவிகளை கண்டுபிடிப்பதில் அவர் ஆற்றல் மிக்க மேதை. திறமையிலும், புத்தி கூர்மையிலும் அவர் "லட்சத்தில் ஒருவர்" என்று, விஞ்ஞானி சி.வி. ராமன் அடிக்கடி கூறுவார்.
 
ஏழைகளிடம் அன்பும், இரக்கமும் கொண்டவர். அவர்கள் நலனுக்காக பாடுபட்டு வந்தார். அவருடைய மரணம், தேசத்திற்கு பெரும் இழப்பு."
 
இவ்வாறு ஜனாதிபதி கிரி கூறினார்.
 
முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த அனுதாப செய்தியில் கூறி இருந்ததாவது:-
 
"புதுமையாக சிந்தனை செய்யக்கூடிய விஞ்ஞானியை தமிழகம் இழந்து விட்டது. துணிவுடன் கருத்துக்களை சொல்லக்கூடிய பெரியவர் அவர். அவருடைய மறைவு பெரும் இழப்பாகும். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."
 
மேற்கண்டவாறு கருணாநிதி கூறியிருந்தார்.
 
பவானி நகரின் அருகே பவானி ஆறும், காவிரி ஆறும் கலக்கும் இடமான கூடுதுறையில் ஜி.டி.நாயுடு அஸ்தியை மகன் கோபால் கரைத்தார்.
 
கோவையில் அவினாசி ரோட்டில் குடியிருந்த ஜி.டி.நாயுடு தனது வீட்டு எதிரிலேயே பெரிய வளாகம் ஒன்றை அமைத்தார். அங்கு மிகப்பெரிய காட்சிக்கூடம், கலை அரங்கம், திருமண மண்டபம் போன்றவை இடம் பெற்றுள்ளன. "பிரசிடெண்ட் ஹால்" என்று அது அழைக்கப்படுகிறது. இந்த காட்சி கூடத்தில் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த அனைத்து கருவிகள், பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருடைய சாதனைகளை சித்தரிக்கும் புகைப்படங்களுடன் அலங்கரிக்கப்படுகின்றன.
 
நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு பெரிய கண்ணாடிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடும். (நம் உருவத்தை நாமே நம்ப முடியாத அளவுக்கு குட்டை நெட்டையாக காட்டும்).
 
வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி, பள்ளிக்கூட மாணவ_மாணவிகள் இந்த காட்சிக்கூடத்தை பார்க்காமல் ஊர் திரும்பமாட்டார்கள். அந்த அளவுக்கு அது பிரசித்தி பெற்று விளங்குகிறது.
 
ஜி.டி.நாயுடுவின் அயராத உழைப்புக்கும், கண்டுபிடிப்புக்கும் சான்று கூறுவது போல அது அமைந்திருக்கிறது.
 
[Read More...]


மாபெரும் விஞ்ஞானி கலிலியோ






மாபெரும் விஞ்ஞானி கலிலியோ--- இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக் கிறது। அரசு மரியாதை செய் கிறது। அறிவியல் உலகத் திற்கு சிறந்த பங்களிப்பு செய் யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனி மையாக இல்லை. அவர்க ளது கண்டுபிடிப்புகள் மதநம் பிக்கைகளுக்கு விரோதமான தாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளி யிட முடியாது. மீறி வெளியிட் டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப் படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலி லியோ கலிலி தன் வாழ்நாளில் சந்தித்தார். நவீன விஞ்ஞானத்தை உருவாக்கியதில் அவரது பங்கு மகத்தானது. வானவியல், இயற் பியல் மற்றும் கணிதவியலில் அவரது கண்டுபிடிப்புகள் ஒரு அறிவி யல் புரட்சியையே ஏற்படுத்தின. ஆனாலும் மதவாதிகளின் தண் டனையை அவர் எதிர்கொள்ளவேண்டி வந்தது.

17 வயதிலேயே...கலிலியோ 1564-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் பைசா நகரத் தில் பிறந்தார். 17 வயது சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் சர்ச்சில் தொங்கவிடப்பட்டிந்த ஒரு விளக்கு காற்றில் ஆடுவதைக் கவனித்தார். அதன் அலைவீச்சு (ளறiபே) சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அது ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்ல ஒரே அளவு நேரத்தை எடுத்துக் கொள்வதாக அவருக் குத் தோன்றியது. அதை எப்படி சரிபார்ப்பது? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று தெரி யாமலா சொன்னார்கள்? தனது நாடித்துடிப்பை வைத்தே தனது ஊகம் சரிதான் என்று கண்டு பிடித்தார். இப்ப டித் தான் அவர் ஊசலின் (ளiஅயீடந யீநனேரடரஅ) விதிகளைக் கண்டுபிடித்தார்.
25 வயதில் பைசா பல் கலைக் கழகத்தில் அவர் கணித விரிவுரையாளராகச் சேர்ந்தார். பண்டிதர்களின் மொழியான லத் தீனில் போதிப்பதற்குப் பதில் பாமர மொழியான இத்தாலி மொழியில் கற்பித்தார். 2000 ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்துவந்த அரிஸ்டாட்டிலின் சில கருத்துக்களை கலிலியோ கேள்வி கேட்கத் தொடங்கினார். உதாரணமாக, இரண்டு பொருட் களை ஒரே நேரத்தில் கீழே விட்டால் கனமான பொருள்தான் தரை யை முதலில் வந்தடையும் என்பது அரிஸ்டாட்டிலின் ‘தத்துவம்.’ இதைத் தவறு என ஒரு சிறு பரிசோதனை மூலம் கலிலியோ நிரூபித்தார் (இது பற்றி அறிவியல் கதிரில் முன்னரே எழுதியிருக் கிறேன்). தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவரும் கலிலியோ தான். ‘சந்திரன் மிருதுவான உருண்டை வடிவப் பந்து’ என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. “சந்திரனின் மேற்பரப்பு கரடுமுரடானது, மலைகளும் பள்ளத் தாக்குகளும் நிறைந்தது” என்று தொலை நோக்கி மூலம் கண்ட றிந்து சொன்னார் கலிலியோ. முதன்முதலில் தொலைநோக்கி மூலம் பால்மண்டலத்திலுள்ள பல புதிய நட்சத் திரங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டவரும் அவரே ; மற்றவர்களை ஆச்சரியப்படுத்திய வரும் அவரே.
பிரபஞ்சத்தின் மையம் பூமியா, சூரியனா..?
“பிரபஞ்சத்தின் மையம் பூமியே-ஏனெனில் அது அவ்வாறு தான் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறது” என்பது அக்காலத் திய நம்பிக்கை. அரிஸ்டாட்டில் மட்டுமல்ல, தாலமி என்ற வானவி யலாளரும் அப்படித்தான் கூறியிருந்தார். “ பிரபஞ்சத்தின் மையம் பூமியல்ல. சூரியன்தான் மையம். சூரியனைச் சுற்றியே பூமியும் மற்ற கிரகங்களும் வருகின்றன. சூரியன் நகருவதாகத் தோன் றுவது பூமியின் வேகத்தினால்தான்” என்பது கோபர்னிக்கஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு. கலிலியோ கோபர்னிக் கஸின் கருத்துதான் சரி என்று நிரூபித்தார். ஆனால் கலிலியோ வின் இந்த `அதிகப் பிரசங்கித்தனங்களை’ சக விஞ்ஞானிகளே கூட ஏற்க மறுத்தனர்.
கோபர்னிக்கஸின் கருத்துக்களை ஆதரித்து கலிலியோ எழுதிய ‘னுயைடடிபரந’ என்ற புத்தகம் மிகப் பிரபலமா னது. பைபிளில் கூறப்பட்ட தற்கு மாறாக கலிலியோ வின் கருத்துக்கள் இருந் ததால் போப் முன் ஆஜ ராகி விசாரணையை அவர் எதிர் கொள்ள நேர்ந் தது. கலிலியோவுக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. பின்னர் அது வீட்டுச் சிறைவாசமாக மாற்றப்பட்டது. அவரது வயோதிக காலத்தில் ‘சர்ச்சைகளில் சிக்காத’ இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட அவர் அனுமதிக்கப்பட்டார் ! 1638-இல் இரு கண்களும் தெரியாமல் போய்விட்டது. அந்த நிலைமையிலும் பெண்டுலத்தைப் பயன் படுத்தி கடிகாரத்தைக் கண்டுபிடித்தார் கலிலியோ. 1642-இல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகத்திற்குத் தந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்। அறிவியல் உண்மைகள் அவை வெளி யிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம்

-- நன்றி-- பேரா. கே.ராஜு
[Read More...]


நவம்பர் 11




[Read More...]


Details of low score in Test Match Cricket.



 Australia crumbled to 47 all out in their second innings of the extraordinary first Test against South Africa on Thursday.
Shane Watson

The lowest Test total ever was 26 by New Zealand against England in 1955 while Australia's lowest was 36 against England in 1902. A last-wicket stand from Peter Siddle and Nathan Lyon avoided Australia beating those unwanted records.


Hosts South Africa had earlier been bowled out for 96 on a remarkable day two and a reasonable-looking wicket after the tourists had made 284 in their first innings with captain Michael Clarke scoring 151.

All four innings will take place on the same day with Australia leading by 235 and with a decent chance of winning the first match of the two-test series despite their woeful second innings effort. 
[Read More...]


Miracle Test Match




Australia in South Africa 2011

South Africa vs Australia, 1st Test
Venue: Newlands, Cape Town   Toss: South Africa (Elect to field)
South Africa 2nd InningsRB4s6sSR
 G Smith(c)not out272250122.73
 J Rudolphc B Haddin & b P Siddle14243058.33
 H Amlanot out6111054.55
 J Kallisdnb00000.00
 AB De Villiersdnb00000.00
 A Princednb00000.00
 M Boucher(wk)dnb00000.00
 V Philanderdnb00000.00
 D Steyndnb00000.00
 M Morkeldnb00000.00
 I Tahirdnb00000.00
 Extrasb - 0, lb - 0, w - 0, nb - 1, Total - 1
 Total: (48 for 1 in 9.2 overs)48 (5.14 runs per over)
Fall of Wickets
1/27 (Jacques Rudolph, 6.4 ov.)
Bowler OMRWEcon
 Ryan Harris 4.202104.85
 Peter Siddle 402315.75
 Shane Watson 10404

Fall of Wickets
Australia 2nd InningsRB4s6sSR
 S Watsonlbw D Steyn4310133.33
 P Hughesc J Rudolph & b M Morkel9221040.91
 R Pontinglbw V Philander012000
 M Clarke(c)lbw V Philander260033.33
 M Husseyc A Prince & b M Morkel01000
 B Haddin(wk)c M Boucher & b V Philander03000
 M Johnsonc H Amla & b V Philander3120025
 R Harrisc Graeme Smith & b M Morkel370042.86
 P Siddlenot out12162075
 S Marshlbw V Philander02000
 N Lyonc de Villiers & b D Steyn14241058.33
 Extrasb - 0, lb - 0, w - 0, nb - 0, Total - 0
 Total: (47 all out in 18 overs)47 (2.61 runs per over)
1/4 (Shane Watson, 0.3 ov.), 2/11 (Ricky Ponting, 5.3 ov.), 3/13 (Phillip Hughes, 6.4 ov.), 4/13 (Michael Hussey, 6.5 ov.), 5/15 (Michael Clarke, 7.3 ov.), 6/18 (Brad Haddin, 9.1 ov.), 7/21 (Ryan Harris, 10.4 ov.), 8/21 (Mitchell Johnson, 11.2 ov.), 9/21 (Shaun Marsh, 11.4 ov.), 10/47 (Nathan Lyon, 17.6 ov.)
Bowler OMRWEcon
 Dale Steyn 512324.6
 Vernon Philander 731552.14
 Morne Morkel 61931.5

Fall of Wickets
South Africa 1st InningsRB4s6sSR
 J Rudolphb R Harris18291062.07
 G Smith(c)b Shane Watson37483077.08
 H Amlalbw Shane Watson3160018.75
 J Kallisc R Ponting & b Shane Watson04000
 AB De Villierslbw R Harris892088.89
 A Princelbw Shane Watson01000
 M Boucher(wk)lbw Shane Watson471057.14
 V Philanderc R Ponting & b R Harris4111036.36
 D Steynnot out9180050
 M Morkelrunout (P Siddle)1100100
 I Tahirb R Harris5500100
 Extrasb - 0, lb - 4, w - 1, nb - 2, Total - 7
 Total: (96 all out in 24.3 overs)96 (3.92 runs per over)
1/24 (Jacques Rudolph, 6.5 ov.), 2/49 (Hashim Amla, 13.2 ov.), 3/49 (Jacques Kallis, 13.6 ov.), 4/73 (Graeme Smith, 17.1 ov.), 5/73 (Ashwell Prince, 17.2 ov.), 6/77 (AB de Villiers, 18.1 ov.), 7/77 (Mark Boucher, 19.3 ov.), 8/81 (Vernon Philander, 20.6 ov.), 9/83 (Morne Morkel, 21.4 ov.), 10/96 (Imran Tahir, 24.3 ov.)
Bowler OMRWEcon
 Ryan Harris 10.333343.14
 Mitchell Johnson 502605.2
 Peter Siddle 411604
 Shane Watson 521753.4
Australia 1st InningsRB4s6sSR
 S Watsonc J Kallis & b D Steyn3150020
 P Hughesc M Boucher & b V Philander9191047.37
 S Marshlbw D Steyn441018043.56
 R Pontinglbw D Steyn8250132
 M Clarke(c)b M Morkel15117622085.8
 M Husseyc M Boucher & b M Morkel118005.56
 B Haddin(wk)c A Prince & b D Steyn581062.5
 M Johnsonc M Morkel & b V Philander20222090.91
 R Harrisc M Morkel & b V Philander5100050
 P Siddlec de Villiers & b M Morkel20542037.04
 N Lyonnot out160016.67
 Extrasb - 5, lb - 7, w - 1, nb - 4, Total - 17
 Total: (284 all out in 75 overs)284 (3.79 runs per over)
Fall of Wickets
1/9 (Shane Watson, 4.3 ov.), 2/13 (Phillip Hughes, 5.6 ov.), 3/40 (Ricky Ponting, 16.2 ov.), 4/143 (Shaun Marsh, 39.1 ov.), 5/158 (Michael Hussey, 44.3 ov.), 6/163 (Brad Haddin, 45.5 ov.), 7/202 (Mitchell Johnson, 52.3 ov.), 8/214 (Ryan Harris, 54.5 ov.), 9/273 (Peter Siddle, 72.4 ov.), 10/284 (Michael Clarke, 74.6 ov.)
Bowler OMRWEcon
 Dale Steyn 2045542.75
 Vernon Philander 2136333
 Morne Morkel 1828234.56
 Imran Tahir 1013503.5
 Jacques Kallis 603706.17

Third Umpire:
 Billy Bowden (NZ)Umpires: Billy Doctrove (WI) & Ian Gould (Eng)
Match Referee: Roshan Mahanama (SL)
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets