Pages

பொன்மொழிகள் 02




உங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ளை ச‌ந்தேக‌ப்ப‌டுங்க‌ள் உங்க‌ள் ந‌ம்பிக்கைக‌ளை ந‌ம்புங்க‌ள்.


தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!



காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.


நீ வெளிநாடு போகிறாய், ஒரு மறைமுக நண்பன் உன்னோடு வருவான். அவன் நீ கற்ற வித்தை. வீட்டிலே இருக்கிறாயா? உனக்கருகே ஒரு தோழன் அவன் தான் உன் மனைவி. நீ வியாதியில் படுத்திருக்கிறாயா? உன் அருகில் ஒரு தோழன் இருக்கிறான். அவன் தான் வைத்தியன். நீ மரண படுக்கையில் இருக்கிறாயா? உன் அருகே ஒரு தோழன் காத்திருக்கிறான், யாத்திரையில் கூட வருவதற்கு. அவன் தான் நீ செய்கிற அருள்” - வியாசக முனிவர்.


வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.



அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன்.



இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.



படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்
இணைக்கத் தயாராக இருங்கள்.
எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை
இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
எனில்
நீங்கள் எங்கிருந்து வந்தாலும்
எங்கு வேண்டுமானாலும் போகலாம்



”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்



”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”


”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”

Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "பொன்மொழிகள் 02"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets