Pages

ஃபுகுஷிமா அணு மின் உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியில் எடுக்க 40 வருடங்கள் தேவை !!!





ப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் அழிவடைந்த அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் 78,400 கோடி ரூபாவும் தேவைப்படும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
 
அப்படி வெளியே எடுக்கும் கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அடுத்த சவால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலையிலிருந்து, எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் செல்லும். அதைச் செய்வதற்கும் ரோபோட்டுகள் எனப்படும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
 

 ஃபுகுஷிமா அணு உலையால் கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது என்றும் தெரியவருகிறது.78,400 கோடி எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான். பிற செலவுகளும் காத்திருக்கின்றன.


இத் தகவல்களை இந்த அணு உலைக்காகவே ஜப்பானிய அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ, டோக்கியோ நகரில் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.


அணு மின்சாரம் தயாரிப்பதற்கு மிகவும் மலிவானது, அணு உலைக்கு எந்தவித ஆபத்தும் நேராது, அப்படியே கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்துவிடலாம், தடுத்து விடலாம் என்று கூறப்படும் வேளையில் ஃபுகுஷிமா அணு உலை தொடர்பாக வெளிவரும் இந்தத் தகவல்கள் அச்சம் தருபவை
யாக இருக்கின்றன.

Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

2 Respones to "ஃபுகுஷிமா அணு மின் உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியில் எடுக்க 40 வருடங்கள் தேவை !!!"

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

வாழ்த்துக்களுடன்


December 21, 2011 at 10:53 PM
karai shiva said...

உங்கள் வரவிற்கு நன்றி.


December 21, 2011 at 11:11 PM

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets