Pages

வருங்காலத் தொழில்நுட்பம் 02



ன்னொரு வருடம் விருட்டெனக் கடந்துவிட்டது. பல்லாயிரம் பில்லியன்களில் இ-மெயில்களும், குறுஞ்செய்திகளும், வலைப்பதிவுகளும், காணொளிகளுமாக இணையம் சென்ற ஆண்டு இறுதியைவிடச் சற்றே பெருத்திருக்கிறது. 26 வயதான ஃபேஸ்புக் நிறுவனர் Time பத்திரிகையின் Man of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். வல்லரசுகளின் ராஜ ரகசியங்கள் இணையம் மூலம் கடைவிரிக்கப்பட்டது. இணையம் விரிந்து வருவதன் வேகமும், வீச்சும் அதிகமாகியிருப்பது வாக்குவாதம் செய்யத் தேவை இல்லாத உண்மை. 2011-லும் இது தொடரும்.

இந்த டெக் பயணத்தைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்!

தொலைபேசி சாதனத் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்து,இன்றைய 
நாளில் கிட்டத்தட்ட ஒரு கணினிக்கு நிகரான வசதியுடன் அலைபேசிகள் வந்துவிட்டாலும், ஒன்று மட்டும் அடிப்படையில் மாறவே இல்லை. அது தொலைபேசி எண்!

ஒரு நபரைத் தொலைபேசியில் அழைக்க, உங்களுக்குத் தேவை அவரது தொலைபேசி எண். அந்த எண் தொலைந்துபோனாலோ, அல்லது மாறிவிட்டாலோ, உங்களது தரப்பில் அந்த எண்ணை மாற்றிக்கொண்டாக வேண்டும். இணையத்தின் முக்கிய சேவைக்கூறாக இன்றைக்கு இருக்கும் Skype, Google Voice போன்ற இணையம் சார்ந்த பேச்சு சேவைக்கூறான Voice Over UP (VoIP) தொழில்நுட்பங்கள் வளர்ந்த பின்னரும், தொலைபேசி எண் என்பதன் முக்கியத் துவத்தைக் குறைக்க முடியவில்லை. eBay நிறுவனத்துக்குச் சொந்தமான Skype, தனது தொழில்நுட்பத்தைப் பாரம்பரியத் தொலைபேசித் தொழில்நுட்பத்துடன் இணைக்க எடுத்த முயற்சி பயனீட்டாளர்களுக்குத் தொலைபேசி எண்களை வழங்குவதில் முடிந்தது. Skype-க்கு அடுத்து, பிரபலமாக இருக்கும் கூகுள் வாய்ஸ் (voice.google.com) பயன்படுத்தப் பதிவு செய்ய நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, தொலைபேசி எண்ணைத் தேர்வு செய்வது.

அண்டன் என்ற என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ளவர்களை எண்களின் மூலம்தான் தொடர்புகொள்ள வேண்டுமா? ஒவ்வொருவரும் பல தொலைபேசிகளை வைத்துக்கொள்ளும் வசதி பெருகிவிட்ட இந்த நாட்களில், எத்தனை எண்களைத் தான் சேமித்துவைக்க வேண்டி வரும்? எனது தொலைபேசி எண் மாறிவிட்டால், அதை எப்படி அனைவருக்கும் தெரிவிக்க முடியும்? பல நாடுகளுக்குப்  பயணிக்கும்போது, அங்கு தற்காலிகமான எண்களைப் பயன்படுத்தும்போது, அதை அனைவருக்கும் தெரிவிக்கவில்லையே என்றெல்லாம் பல கேள்விகள் அவ்வப்போது என் மனதில் எழுவது உண்டு.

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்கும் வலிமை இருக்கும் ஒரே நிறுவனம், ஃபேஸ்புக். எப்படி?

இ-மெயிலுக்கு நிகரான தகவல் தொடர்பு சேவையாக வளர்ந்து நிற்கும் ஃபேஸ்புக்கை, இன்றைய தேதியில் 550 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். சராசரி ஃபேஸ்புக் பயனீட்டாளர் தன்னைப்பற்றிய தகவல் பகுதியில் தன்னுடைய தொலைபேசி எண்களைப் பதிந்து வைத்துக்கொள்கிறார். அவரை அழைத்துப் பேச வேண்டும். ஆனால், அவரது தொலைபேசி எண் தெரியாவிட்டால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து எண்ணைக் கண்டுபிடித்துக் கூப்பிடலாம், அல்லவா? ஒருவேளை, அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டால், சொந்த பந்தம், நண்பர்களை அழைத்து சொல்ல வேண்டியது இல்லை. ஃபேஸ்புக்கில் புதிய எண்ணை மாற்றிவிட்டால் போதும்.

இன்னும் ஒருபடி முன்னால் செல்லலாம். ஆப்பிள் மற்றும் கூகுள் போல, ஃபேஸ்புக்கும் தொலைபேசிச் சாதனம் ஒன்றை வெளியிட்டால்? என்னிடம் பேச, அண்டன் பிரகாஷ் என்ற எண்ணைத் தேடிக் கூப்பிட வேண்டாம். ஃபேஸ்புக் போனைத் திறந்து 'அண்டனைக் கூப்பிடு!’ என்றால், அது என்னுடைய தற்போதைய தொலைபேசியில் அழைக்கும். என்னிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் இருந்தால், அவற்றை எந்த வரிசையில் அழைக்க வேண்டும் என்பதை நான் ஃபேஸ்புக்கில் கொடுத்துவிட்டால், அந்த வரிசைப்படி அழைத்து என்னைத் தொடர்புகொள்ளவைக்கும். தேவையான பயனீட்டாளர்கள் கிடைத்த பின், தொலைபேசி எண் என்பதன் தேவையையே ஃபேஸ்புக்கால் இல்லாமல் செய்துவிட முடியும். வெளிப்படையாக ஆமோதிக்காவிட்டாலும், இந்தக் கோணத்தில் ஃபேஸ்புக்குக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிகிறது. தங்களது தொலைபேசித் தொழில்நுட்பம் திருப்திகரமாகச் செயல்படும் வரை தங்களது ஆர்வத்தை ரகசியமாக வைத்திருக்க ஃபேஸ்புக் முயற்சிக்கும். காரணம், அதுவரை ஆப்பிளின் ஐ-போன்/ஐ-பேட் பயனீட்டாளர்களும், கூகுளின் ஆண்ட்ராயிட் பயனீட் டாளர்களும் தமது அலைபேசிகளில் இருந்து ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி, அதைச் சார்ந்து இருக்க வைக்க வேண்டும் என்பது ஃபேஸ்புக்கின் விருப்பம்.

2015 வாக்கில், தனி நபர்களின் தொலைபேசி எண் என்பதே மறைந்துவிடும் என்பது எனது அனுமானம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
[Read More...]


வருங்காலத் தொழில்நுட்பம் 01










           இரண்டு வாரங்களுக்கு முன் சான்ஃபிரான்சிஸ்கோ டெக் கான்ஃபரன்ஸ் ஒன்றில் பேசிய கூகுள் சி.இ.ஓ எரிக் ஸ்மித், 'கார்களின் பிரச்னை, அவை கம்ப்யூட்டர்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதுதான். 


இல்லை என்றால், கார்கள் இப்போது தங்களைத் தாமாகவே ஓட்டிக்கொண்டு இருக்கும்!' என்று வேறு ஏதோ கேள்விக்குப் பதில் அளிக்கையில், எக்ஸ்ட்ரா ஒரு பிட் விட, டெக் உலக நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் முகங்களில் பளீர் பல்ப். அவர்கள் சுறுசுறுப்பாக அதைப்பற்றிய செய்திகளைத் தேடத் துவங்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக ரகசியமாக கூகுள், தானோட்டு கார் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.


 அதைப்பற்றிய விவரங்களைப் பார்க்கும் முன், கூகுளின் 'Street View' புராஜெக்ட்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் கட்டப்பட்டு இருக்கும் கூகுளின் மேப்ஸ் தளம் (http://maps.google.com) பிரபலமானது. புதிய இடம் ஒன்றுக்குச் செல்கையில் திசைகள் தெரிந்துகொள்ள மேப்ஸ் தளம் பயன்படும். 



அந்தத் தளத்தின் பயனீட்டை அதிகரிக்க, கூகுள் சென்ற ஆண்டில் Street View என்பதை அறிமுகப்படுத்தியது. செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும் பறவைப் பார்வையுடன், தெருவில் நடக்கும்போது பார்க்கும் பார்வையையும் இணைத்தால் என்ன என்ற சிந்தனையின் வடிவாக்கம்தான் Street Viewன் அடிப்படை. உதாரணமாக, பாளையங்கோட்டை NGO காலனியில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடைபெறும் நண்பனின் திருமண வரவேற்புக்கு, நெல்லை டவுனில் இருந்து வர வேண்டி இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். கூகுள் மேப்பில், எங்கிருந்து புறப்பட்டு, எங்கே செல்ல வேண்டும் என்பதைக் கொடுத்தால், திருப்பம் பை திருப்பமாக அது வழி சொல்லிக்கொடுக்கும்.

இதனுடன், செல்லும் வழியில் உள்ள பாதையையே தொடர்புகைப்படமாகக் காட்டினால், மிக வசதியாக இருக்கும். 'அப்டியே வந்து, பிள்ளையார் கோயில் முக்குல திரும்பி, ஒரு ரெண்டு நிமிஷம் ஓட்டினா, அண்ணா சிலை வரும். அதுல லெஃப்ட்ல திரும்பினா...' என்றெல்லாம் நண்பனின் குளறுபடி திசை காட்டல் தேவைப்படாது. எங்கே போகப்போகிறீர்கள்; அதன் பாதையில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு விஷ§வலாக, புறப்படுவதற்கு முன்பே தெரிந்திருக்கும். 'நல்லா இருக்கே' என்று தோன்றலாம். ஆனால், இதைக் காரியத்தில் கொண்டுவர, கூகுள் பட்ட/படும் பாடு பெரிது. தெருக் காட்சிகளைப் படம் எடுக்க கேமரா பொருத்தப்பட்ட கார்களை அனுப்பிவைக்க வேண்டும். இந்த கார்கள் சீரான வேகத்தில் செல் லும்போது, தெருக் காட்சிகள் படம் எடுக்கப்பட்டு, சரியாக இணைக்கப்பட வேண்டும். இப்படிப் படம் எடுத்ததில் சில்லறைத்தனமாகவும், சீரியஸாகவும் கூகுள் எதிர்பார்க்காத சில பிரச்னைகள்.

உதாரணத்துக்கு, கோடைக் காலம் என்பதால், நீச்சல் குளத்தின் அருகே டாப்லெஸ்ஸாக சூரியக் குளியல் எடுத்தபடி இருந்த சீமாட்டியின் படம் வேலிகளுக்கு இடையே தெரிவதை பக்கத்து வீட்டு மாமி சொல்லித் தெரிந்துகொண்ட சீமாட்டி அப்செட். சாலை விபத்தில் இறந்தவரின் பிணம் நகர்த்தப்படாமல் அப்படியேகிடக்கும் க்ளோசப் கோரக் காட்சி என்ற ரீதியிலான குற்றச்சாட்டுகள் சமர்ப் பிக்கப்பட்டால், அவற்றை கூகுள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதால், அதற்கான பணியாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அவசியம் வேறு.

அதைவிட முக்கியமானது, இந்த கேமரா கார்கள் தெருவில் உலா வருகையில், தெருப் புகைப்படங்களை எடுப்பதற்கும் மேலாக என்னென்ன மற்ற தகவல்களைச் சேகரிக்கலாம் என்ற ஆர்வக் கோளாறு காரணமாக, வீடுகளில் இருக்கும் வயர்லெஸ் இணைப்புகளின் விவரங்களையும் சேகரித்தது தெரிய வர... பல நாடுகளின் அரசாங்கங்களுக்குக் கோபம். ஜெர்மனிபோன்ற சில நாடுகள்... கூகுள், கேமரா கார்களைப் பயன்படுத்துவதையே தடை செய்துவிட, 'தெரியாம செஞ்சுட் டேண்ணா... இனி இப்படி பண்ணவே மாட் டேங்ணா!' என்று சர்வதேச மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை. ஆனாலும், எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கெல்லாம் தொடர்ந்து தெருப் பார்வை புகைப்படம் எடுக்கும் கார் களை ஓடவிட்டு, தகவல் திரட்டபடியேதான் இருக்கிறது கூகுள்.

Street View அறிமுகம் போதும். இப்போது ஆளே இல்லாமல் கார் ஓட்டும் தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம்.

சென்ற ஒரு வருடமாக, ஓட்டுநர் இயக்க வேண்டிய அவசியம் இல்லாமல், GPS மற்றும் சென்சார்களின் உதவியுடன் பல டொயோட்டா கார்களை சான்ஃபிரான்சிஸ்கோவில் இயக்கி வருவதை கூகுள் ஆமோதித்து இருக்கிறது. பரிசோதனை முயற்சியாக, கிட்டத்தட்ட 1,50,000 மைல்கள் இப்படி ஓட்டப்பட்டு இருக்கும் கார்களில், ஓட்டுநர் ஒருவர் இருப்பார். தானியக்கத்தில் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டால், ஸ்டீயரிங் வீலை லேசாகப் பிடித்தால் போதும். காரின் தானியக்கம் நின்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் கார் வந்துவிடும். இது வரையிலான இந்தப் பரிசோதனையில், விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை. இரண்டு முறை மட்டுமே ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டுக்கு காரை கொண்டுவர வேண்டிய அவசியம் இருந்தது என்பது கொசுறு செய்திகள்.

'இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித சமூகத்துக்கு மிகப் பாதுகாப்பான வாகன ஓட்டுதலை அளிக்க கூகுள் முயற்சி செய்வது பாராட்டத்தக்கது!






                                           http://www.vikatan.com/article.php?aid=1945&sid=59&mid=10
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets