இவை தற்போது கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள ராயல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி ஆய்வு நடத்திய விலங்கியல் ஆராய்ச்சியாளர் நிக் கார்டனர் கூறியதாவது: 9.9 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை ‘டைனோசர் காலம்’ என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக குறிப்பிடுவார்கள்.
அந்த காலகட்டத்தில் டைனோசர்கள் போல முதலை வகையை சேர்ந்த ஷீல்டு குரோக் விலங்கினங்களும் அதிகம் இருந்துள்ளன. இவற்றின் மண்டை ஓடு தட்டையாக இருந்திருக்கிறது.
அது கவசம் போல பாதுகாப்பாக இருந்ததால் ஷீல்டு குரோக்கோடைல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை தற்போதைய முதலையின விலங்குகளின் மூதாதை விலங்குகள் ஆகும்.
ஷீல்டு குரோக் படிமங்கள் கண்டெடுக்கப்பட்ட மொராக்கோ அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில்தான் முதலை இனம் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படுகிறது.




Previous Article

Responses
0 Respones to "தகவல்: 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய முதலை இனங்கள்"
Post a Comment