Pages

Miracle Test Match




Australia in South Africa 2011

South Africa vs Australia, 1st Test
Venue: Newlands, Cape Town   Toss: South Africa (Elect to field)
South Africa 2nd InningsRB4s6sSR
 G Smith(c)not out272250122.73
 J Rudolphc B Haddin & b P Siddle14243058.33
 H Amlanot out6111054.55
 J Kallisdnb00000.00
 AB De Villiersdnb00000.00
 A Princednb00000.00
 M Boucher(wk)dnb00000.00
 V Philanderdnb00000.00
 D Steyndnb00000.00
 M Morkeldnb00000.00
 I Tahirdnb00000.00
 Extrasb - 0, lb - 0, w - 0, nb - 1, Total - 1
 Total: (48 for 1 in 9.2 overs)48 (5.14 runs per over)
Fall of Wickets
1/27 (Jacques Rudolph, 6.4 ov.)
Bowler OMRWEcon
 Ryan Harris 4.202104.85
 Peter Siddle 402315.75
 Shane Watson 10404

Fall of Wickets
Australia 2nd InningsRB4s6sSR
 S Watsonlbw D Steyn4310133.33
 P Hughesc J Rudolph & b M Morkel9221040.91
 R Pontinglbw V Philander012000
 M Clarke(c)lbw V Philander260033.33
 M Husseyc A Prince & b M Morkel01000
 B Haddin(wk)c M Boucher & b V Philander03000
 M Johnsonc H Amla & b V Philander3120025
 R Harrisc Graeme Smith & b M Morkel370042.86
 P Siddlenot out12162075
 S Marshlbw V Philander02000
 N Lyonc de Villiers & b D Steyn14241058.33
 Extrasb - 0, lb - 0, w - 0, nb - 0, Total - 0
 Total: (47 all out in 18 overs)47 (2.61 runs per over)
1/4 (Shane Watson, 0.3 ov.), 2/11 (Ricky Ponting, 5.3 ov.), 3/13 (Phillip Hughes, 6.4 ov.), 4/13 (Michael Hussey, 6.5 ov.), 5/15 (Michael Clarke, 7.3 ov.), 6/18 (Brad Haddin, 9.1 ov.), 7/21 (Ryan Harris, 10.4 ov.), 8/21 (Mitchell Johnson, 11.2 ov.), 9/21 (Shaun Marsh, 11.4 ov.), 10/47 (Nathan Lyon, 17.6 ov.)
Bowler OMRWEcon
 Dale Steyn 512324.6
 Vernon Philander 731552.14
 Morne Morkel 61931.5

Fall of Wickets
South Africa 1st InningsRB4s6sSR
 J Rudolphb R Harris18291062.07
 G Smith(c)b Shane Watson37483077.08
 H Amlalbw Shane Watson3160018.75
 J Kallisc R Ponting & b Shane Watson04000
 AB De Villierslbw R Harris892088.89
 A Princelbw Shane Watson01000
 M Boucher(wk)lbw Shane Watson471057.14
 V Philanderc R Ponting & b R Harris4111036.36
 D Steynnot out9180050
 M Morkelrunout (P Siddle)1100100
 I Tahirb R Harris5500100
 Extrasb - 0, lb - 4, w - 1, nb - 2, Total - 7
 Total: (96 all out in 24.3 overs)96 (3.92 runs per over)
1/24 (Jacques Rudolph, 6.5 ov.), 2/49 (Hashim Amla, 13.2 ov.), 3/49 (Jacques Kallis, 13.6 ov.), 4/73 (Graeme Smith, 17.1 ov.), 5/73 (Ashwell Prince, 17.2 ov.), 6/77 (AB de Villiers, 18.1 ov.), 7/77 (Mark Boucher, 19.3 ov.), 8/81 (Vernon Philander, 20.6 ov.), 9/83 (Morne Morkel, 21.4 ov.), 10/96 (Imran Tahir, 24.3 ov.)
Bowler OMRWEcon
 Ryan Harris 10.333343.14
 Mitchell Johnson 502605.2
 Peter Siddle 411604
 Shane Watson 521753.4
Australia 1st InningsRB4s6sSR
 S Watsonc J Kallis & b D Steyn3150020
 P Hughesc M Boucher & b V Philander9191047.37
 S Marshlbw D Steyn441018043.56
 R Pontinglbw D Steyn8250132
 M Clarke(c)b M Morkel15117622085.8
 M Husseyc M Boucher & b M Morkel118005.56
 B Haddin(wk)c A Prince & b D Steyn581062.5
 M Johnsonc M Morkel & b V Philander20222090.91
 R Harrisc M Morkel & b V Philander5100050
 P Siddlec de Villiers & b M Morkel20542037.04
 N Lyonnot out160016.67
 Extrasb - 5, lb - 7, w - 1, nb - 4, Total - 17
 Total: (284 all out in 75 overs)284 (3.79 runs per over)
Fall of Wickets
1/9 (Shane Watson, 4.3 ov.), 2/13 (Phillip Hughes, 5.6 ov.), 3/40 (Ricky Ponting, 16.2 ov.), 4/143 (Shaun Marsh, 39.1 ov.), 5/158 (Michael Hussey, 44.3 ov.), 6/163 (Brad Haddin, 45.5 ov.), 7/202 (Mitchell Johnson, 52.3 ov.), 8/214 (Ryan Harris, 54.5 ov.), 9/273 (Peter Siddle, 72.4 ov.), 10/284 (Michael Clarke, 74.6 ov.)
Bowler OMRWEcon
 Dale Steyn 2045542.75
 Vernon Philander 2136333
 Morne Morkel 1828234.56
 Imran Tahir 1013503.5
 Jacques Kallis 603706.17

Third Umpire:
 Billy Bowden (NZ)Umpires: Billy Doctrove (WI) & Ian Gould (Eng)
Match Referee: Roshan Mahanama (SL)
[Read More...]


அறிவியல் - தொழில்நுட்பம்






விண்வெளியில் ஜப்பான் புரட்சி

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஜரோப்பிய நாடுகள் அடங்கிய 16 நாடுகள் கூட்டமைப்பு விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி உள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் ஜப்பானின் ஆய்வு மையமும் அடங்கி இருக்கிறது. இந்த ஆய்வகம் கிப்போ என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானின் கிப்போ ஆய்வு மையம் பூமியில் இருந்து 125 மைல் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆய் வகம் தற்போது பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்வெளி வீரர்களுக்கான சிறப்பு வசதிகள், நுண்ணோக்கிகள் மற்றும் அதிநவீன கருவிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கு பேட்டரிகளுக்கு பதிலாக சூரிய ஒளியை பயன்படுத்திக் கொள்ளும் சோலார் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நவீன ஏற்பாடுகளுக்கு பிறகு இதன் பயணவேகம் 125 ஆயிரம் மைல்களாக அதிகரித்துள்ளது.

கறிக்கோழி இறகிலிருந்து புதிய பயோடீசல்

டீசல், பெட்ரோலுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் மாற்று எரிபொருள் பயோடீசல். காட்டாமணக்கில் இருந்து பயோடீசல் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. தற்போது கறிக்கோழி, வாத்துக்களின் இறகுகளை பயன்படுத்தி புதிய வகை பயோடீசலை தயாரிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அமெரிக்காவின் ரெனோ நகரில் உள்ள நெவாடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரசாயனம் மற்றும் உலோக வியல் என்ஜினியரிங் மாணவர்கள் இந்த புதுமையான முறையை கண்டுபிடித்துள்ளனர். கறிக்கோழிகள் மற்றும் வாத்துக்களை இறைச்சியாக பயன்படுத்தும்போது இறகுகள் மற்றும் சில பாகங்கள் கழிக்கப்படுகிறது. இவற்றில் 11 சதவீத அளவில் கொழுப்பு இருப்பது தெரிய வந்தது. இந்தக் கழிவுகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து தரமான பயோடீசலாக மாற்றுகிறார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு வாளி அளவில் உள்ள இறகுகளிலிருந்து ஒரு துளி பயோடீசல்தான் தயாரிக்க முடியும்.

எம்ப்ராய்னிக் ஸ்டெம்செல்லில் உருவான எலி

எம்ப்ராய்னிக் ஸ்டெம்செல் தொழில்நுட்பம் என்பது ஏதேனும் ஒரு செல்லை புதிய முறை யில் மாற்றி அமைத்து ஸ்டெம் செல்லைப் போல அதிக திறனுடைய செல்லை உற்பத்தி செய்ய முடியும். இந்த செல்களை ஸ்டெம் செல்லைப் போல எல்லாவித உறுப்புகள் உருவாக்கத்துக்கும் பயன்படுத்த முடியும். இந்த புதிய தொழில்நுட்ப முறையில் சீன விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு எலியை உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர். முதிர்ந்த எலியினுடைய தோலில் உள்ள "ஐபிஎஸ்' செல் எனப்படும் குறிப்பிட்ட செல்களை எடுத்து எம்ப்ராய்னிக் முறையில் மாற்றி அமைக்கப்பட்டு இந்த எலி உருவாக் கப்பட்டு உள்ளது. எந்தவித நோய்களும் தாக்காத வகையில் எதிர்ப்புத் தன்மையைப் புகுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது இந்த எலியின் சிறப்பம்சமாகும். இதனால் இந்த எலி நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழும் என்று இதை உருவாக்கிய விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்யும் தாவரங்கள்

தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என்கிறது புதிய ஆய்வு. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் இதைக் கண்டுபிடித்து உள்ளனர். தாவரங்கள் தங்களின் ஆபத்தான காலங்களில் விரும்பியே தற்கொலை செய்து கொள்கிறது என்கிறார் கள் ஆய்வாளர்கள். அதாவது விலங்குகள், பூச்சிகளால் தாக்கப்பட்டாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டாலோ தற்கொலை நடவடிக்கையாக அந்த பாகங்களுக்கான வளர்ச்சியை நிறுத்தி விடுகிறது. இதுவரை இதுபோன்ற செயல்களுக்கு வெப்பமே காரணம் என்று தவறாக எண்ணப்பட்டு வந்தது. ஆனால் தாவரங்கள் தங்கள் உடலின் ஒரு பாகத்தை செயலிழக்கச் செய்துவிட்டாலும் அதன் மையப் பகுதி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த தற்கொலை நிகழ்வு அதன் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இடம் பெயர்ந்து செல்ல முடியாத காரணத்தால் உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு திட்டமே ஆகும். இந்த தற்கொலை சுபாவம், இலையுதிர் காலத்தில் தனது இலைகளை உதிர்த்துவிட்டு சாதகமான சூழலுக்கு காத் திருக்கும் அந்த மாற்றத்தைப் போன்றதுதான் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 






                                                                                                                                                                             
                                                                         http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3327http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3327
[Read More...]


வாழ்க்கை வரலாறு








வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.




                                                                                         http://www.perunthalaivar.org/life-history/
                                                                                               
[Read More...]


நவம்பர் 10










                                                                                         கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                                                              
[Read More...]


பூமிக்கு அருகில் வந்து சென்றது அபூர்வ கிரகம்



வாஷிங்டன் : விண்வெளியில் இருந்து கீழிறங்கிய கிரகம் ஒன்று, 8ம் தேதி இரவு பூமியை நெருங்கி வந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ தெரிவித்துள்ளது. 2005 ஒய்.யூ.55 என்ற அந்த கிரகம், பூமியில் இருந்து 3.24 லட்சம் கி.மீ. வரை நெருங்கி வந்தது. 8ம் தேதி இரவு வேகமாக இது நடந்தது. 
சந்திரனில் இருந்து பூமிக்கு இடையே உள்ள தூரத்தில் 0.85 பங்கு அளவுக்கு கிரகம் அருகே வந்தது. 

விண் பாறாங்கல் வடிவிலான இந்த கிரகம், பூமிக்கு அருகில் வருவதால் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய உதவும் என கருதப்பட்டது. அதற்காக தொலைநோக்கி கருவிகளுடன் நாசா விஞ்ஞானிகள் காத்திருந்தனர். 1,300 அடி அகலம் கொண்டது இந்த ஒய்.யூ.55 கிரகம். சீரற்ற சுழற்சி, மெதுவான சுற்றுப் பாதை கொண்ட இது, கருமையானது என நாசா தெரிவித்திருந்தது. எனினும், பூமிக்கு மிக அருகில் வந்ததை காண முடியாமல் விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

இதுபற்றி நாசா செய்தி தொடர்பாளர் வெரோனிகா மெக்கிரகர் கூறுகையில், ‘‘மனிதன் பார்க்கக்கூடிய குறைந்தபட்ச வெளிச்சத்தைவிட 100 மடங்கு குறைவான இருளில் இருந்ததால் கிரகத்தை காண முடியவில்லை’’ என்றார். கார்பன் அடிப்படையிலான சி&டைப் கிரகங்கள் பற்றி விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களை அறிய இந்த கிரகம் பூமிக்கு அருகில் வருவது வாய்ப்பாக அமையும் என்று நாசாவின் கலிபோர்னிய மைய அதிகாரி டான் யோமன்ஸ் தெரிவித்தார். 

இதுபோன்ற கார்பன் அடிப்படையிலான பாறை வடிவ கிரகங்கள் உயிர் வாழத் தேவையான காரணிகளை பூமிக்கு அளிக்கின்றன. அதன் மூலம் உயிரினங்கள் வாழ முடிகிறது. இந்த கிரகங்கள் இல்லாமல் இருந்தால் நாம் இங்கிருந்திருக்க முடியாது என்று டான் யோமன்ஸ் கூறினார்.

                            
                                                                                                 
                                                                                                                                                           Thanks Dinakaran News Paper
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets