Pages

பொன்மொழிகள் 06






பேச்சாளர்களே!
பார்க்கும்படியாக நில்லுங்கள்
கேட்கும்படியாக பேசுங்கள்
விரும்பும்படியாக உட்காருங்கள்



சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.



துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்….
பூக்கள் மலரும்
- ஐஸா



விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.


மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை
-சீனப்பெரும் தலைவர் மாவோ


தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.
உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.
உடன் பிறப்பால் தோள்வலி போம்.
மனைவியோடு எவையும் போம்.


பற்றற்றவர்களாக இருங்கள்.அதற்காக காட்டுக்குள் சென்றுவிடாதீர்கள்
-மாத்யூ கிரீன்


நண்பனே!
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே!



எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்
- தாகூர்



செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது
- சபாகிளிஸ்



வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!

[Read More...]


பொன்மொழிகள் 05






எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.



வள்ளலுக்கு பொன் துரும்பு.
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.



ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?



ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி



வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;
குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்.
-ஏ.வான்பர்ன்


மிகக் கடினமானவை மூன்றுண்டு
   1. இரகசியத்தை காப்பது.
   2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
   3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.



நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்
   1. இதயத்தால் உணர்தல்.
   2. சொற்களால் தெரிவித்தல்.
   3. பதிலுக்கு உதவி செய்தல்.



பெண்மையை காக்க மூன்றுண்டு
   1. அடக்கம்.
   2. உண்மை.
   3. கற்பு.



மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு
   1. சென்றதை மறப்பது.
   2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
   3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.



இழப்பு மூன்று வகையிலுண்டு
   1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
   2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
   3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.



உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்
   1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
   2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
   3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்

[Read More...]


பொன்மொழிகள் 04





நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்



ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,
கடனை நாமம் சாத்தினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
-முள்முடியில் தி.ஜானகிராமன்



ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.



ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.



சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்


ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது, “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?

வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்



நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்
நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்
இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்
எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.



ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.


நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.
1.வானத்திலே கழுகினுடைய வழி,
2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,
4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.



போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
1.நீத்தார் உலகம்,
2.மலட்டுக் கர்ப்பம்,
3.தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
4.போதுமென்று சொல்லாத நெருப்பு.



பூமி தாங்கமாட்டாத நான்குண்டு.
1.அரசனாக மாறிய அடிமையினிமித்தமும்,
2.விரும்பின பதார்த்தங்களெல்லாம் கிடைத்த முட்டாளினிமித்தமும்,
3.பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணினிமித்தமும்,
4.தன் எஜமானிக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.



பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
1.அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு,
2.சக்தியற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டிவைக்கும் குழிமுயல்கள்,
3.ராஜா இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்,
4.தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரமனைகளிலிருக்கிற 



சிலந்திப் பூச்சி.
விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
1.மிருகங்களில் சக்திவாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கம்,
2.போர்க்குதிரை,
3.வெள்ளாட்டுக்கடா,
4.ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா.


[Read More...]


பொன்மொழிகள் 03





ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.

எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.
நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.
யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.
அப்பன் எத்தனை உயரமாயிருந்தாலென்ன நீ உயர நீ தான் வளரவேண்டும்
எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்


”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்



”காலம்….!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!



”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்



”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.



நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை
ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி



உனக்கு நிறைய தெரிந்திருந்தாலும்
உன் தொப்பியிடமும் யோசனை கேள்



எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.



உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்

[Read More...]


பொன்மொழிகள் 02




உங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ளை ச‌ந்தேக‌ப்ப‌டுங்க‌ள் உங்க‌ள் ந‌ம்பிக்கைக‌ளை ந‌ம்புங்க‌ள்.


தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!



காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.


நீ வெளிநாடு போகிறாய், ஒரு மறைமுக நண்பன் உன்னோடு வருவான். அவன் நீ கற்ற வித்தை. வீட்டிலே இருக்கிறாயா? உனக்கருகே ஒரு தோழன் அவன் தான் உன் மனைவி. நீ வியாதியில் படுத்திருக்கிறாயா? உன் அருகில் ஒரு தோழன் இருக்கிறான். அவன் தான் வைத்தியன். நீ மரண படுக்கையில் இருக்கிறாயா? உன் அருகே ஒரு தோழன் காத்திருக்கிறான், யாத்திரையில் கூட வருவதற்கு. அவன் தான் நீ செய்கிற அருள்” - வியாசக முனிவர்.


வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.



அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன்.



இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.



படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்
இணைக்கத் தயாராக இருங்கள்.
எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை
இழக்கத் தயாராகி விடாதீர்கள்!
எனில்
நீங்கள் எங்கிருந்து வந்தாலும்
எங்கு வேண்டுமானாலும் போகலாம்



”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்



”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”


”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”

[Read More...]


பொன்மொழிகள் 01





நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
- ஆப்ரகாம் லிங்கன்



முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
உலகம் உன்னை விழுங்கி விடும்.
-பாரசீகம்



தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது
-ஹென்றி போர்டு



எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
-இங்கிலாந்து.



உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.
-யேசுநாதர்.
Let He Who Is Without Sin Cast The First Stone - Jesus



ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்
குதிரையை பின்னால் இருந்தும்
முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.



அப்பன் தெய்வம்,
அம்மை தேசம்
தந்தை தான் தெய்வம்,
தாய் தான் நாடு


எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.

எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.
[Read More...]


வருங்காலத் தொழில்நுட்பம் 02



ன்னொரு வருடம் விருட்டெனக் கடந்துவிட்டது. பல்லாயிரம் பில்லியன்களில் இ-மெயில்களும், குறுஞ்செய்திகளும், வலைப்பதிவுகளும், காணொளிகளுமாக இணையம் சென்ற ஆண்டு இறுதியைவிடச் சற்றே பெருத்திருக்கிறது. 26 வயதான ஃபேஸ்புக் நிறுவனர் Time பத்திரிகையின் Man of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். வல்லரசுகளின் ராஜ ரகசியங்கள் இணையம் மூலம் கடைவிரிக்கப்பட்டது. இணையம் விரிந்து வருவதன் வேகமும், வீச்சும் அதிகமாகியிருப்பது வாக்குவாதம் செய்யத் தேவை இல்லாத உண்மை. 2011-லும் இது தொடரும்.

இந்த டெக் பயணத்தைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்!

தொலைபேசி சாதனத் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்து,இன்றைய 
நாளில் கிட்டத்தட்ட ஒரு கணினிக்கு நிகரான வசதியுடன் அலைபேசிகள் வந்துவிட்டாலும், ஒன்று மட்டும் அடிப்படையில் மாறவே இல்லை. அது தொலைபேசி எண்!

ஒரு நபரைத் தொலைபேசியில் அழைக்க, உங்களுக்குத் தேவை அவரது தொலைபேசி எண். அந்த எண் தொலைந்துபோனாலோ, அல்லது மாறிவிட்டாலோ, உங்களது தரப்பில் அந்த எண்ணை மாற்றிக்கொண்டாக வேண்டும். இணையத்தின் முக்கிய சேவைக்கூறாக இன்றைக்கு இருக்கும் Skype, Google Voice போன்ற இணையம் சார்ந்த பேச்சு சேவைக்கூறான Voice Over UP (VoIP) தொழில்நுட்பங்கள் வளர்ந்த பின்னரும், தொலைபேசி எண் என்பதன் முக்கியத் துவத்தைக் குறைக்க முடியவில்லை. eBay நிறுவனத்துக்குச் சொந்தமான Skype, தனது தொழில்நுட்பத்தைப் பாரம்பரியத் தொலைபேசித் தொழில்நுட்பத்துடன் இணைக்க எடுத்த முயற்சி பயனீட்டாளர்களுக்குத் தொலைபேசி எண்களை வழங்குவதில் முடிந்தது. Skype-க்கு அடுத்து, பிரபலமாக இருக்கும் கூகுள் வாய்ஸ் (voice.google.com) பயன்படுத்தப் பதிவு செய்ய நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, தொலைபேசி எண்ணைத் தேர்வு செய்வது.

அண்டன் என்ற என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ளவர்களை எண்களின் மூலம்தான் தொடர்புகொள்ள வேண்டுமா? ஒவ்வொருவரும் பல தொலைபேசிகளை வைத்துக்கொள்ளும் வசதி பெருகிவிட்ட இந்த நாட்களில், எத்தனை எண்களைத் தான் சேமித்துவைக்க வேண்டி வரும்? எனது தொலைபேசி எண் மாறிவிட்டால், அதை எப்படி அனைவருக்கும் தெரிவிக்க முடியும்? பல நாடுகளுக்குப்  பயணிக்கும்போது, அங்கு தற்காலிகமான எண்களைப் பயன்படுத்தும்போது, அதை அனைவருக்கும் தெரிவிக்கவில்லையே என்றெல்லாம் பல கேள்விகள் அவ்வப்போது என் மனதில் எழுவது உண்டு.

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்கும் வலிமை இருக்கும் ஒரே நிறுவனம், ஃபேஸ்புக். எப்படி?

இ-மெயிலுக்கு நிகரான தகவல் தொடர்பு சேவையாக வளர்ந்து நிற்கும் ஃபேஸ்புக்கை, இன்றைய தேதியில் 550 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். சராசரி ஃபேஸ்புக் பயனீட்டாளர் தன்னைப்பற்றிய தகவல் பகுதியில் தன்னுடைய தொலைபேசி எண்களைப் பதிந்து வைத்துக்கொள்கிறார். அவரை அழைத்துப் பேச வேண்டும். ஆனால், அவரது தொலைபேசி எண் தெரியாவிட்டால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து எண்ணைக் கண்டுபிடித்துக் கூப்பிடலாம், அல்லவா? ஒருவேளை, அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டால், சொந்த பந்தம், நண்பர்களை அழைத்து சொல்ல வேண்டியது இல்லை. ஃபேஸ்புக்கில் புதிய எண்ணை மாற்றிவிட்டால் போதும்.

இன்னும் ஒருபடி முன்னால் செல்லலாம். ஆப்பிள் மற்றும் கூகுள் போல, ஃபேஸ்புக்கும் தொலைபேசிச் சாதனம் ஒன்றை வெளியிட்டால்? என்னிடம் பேச, அண்டன் பிரகாஷ் என்ற எண்ணைத் தேடிக் கூப்பிட வேண்டாம். ஃபேஸ்புக் போனைத் திறந்து 'அண்டனைக் கூப்பிடு!’ என்றால், அது என்னுடைய தற்போதைய தொலைபேசியில் அழைக்கும். என்னிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் இருந்தால், அவற்றை எந்த வரிசையில் அழைக்க வேண்டும் என்பதை நான் ஃபேஸ்புக்கில் கொடுத்துவிட்டால், அந்த வரிசைப்படி அழைத்து என்னைத் தொடர்புகொள்ளவைக்கும். தேவையான பயனீட்டாளர்கள் கிடைத்த பின், தொலைபேசி எண் என்பதன் தேவையையே ஃபேஸ்புக்கால் இல்லாமல் செய்துவிட முடியும். வெளிப்படையாக ஆமோதிக்காவிட்டாலும், இந்தக் கோணத்தில் ஃபேஸ்புக்குக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிகிறது. தங்களது தொலைபேசித் தொழில்நுட்பம் திருப்திகரமாகச் செயல்படும் வரை தங்களது ஆர்வத்தை ரகசியமாக வைத்திருக்க ஃபேஸ்புக் முயற்சிக்கும். காரணம், அதுவரை ஆப்பிளின் ஐ-போன்/ஐ-பேட் பயனீட்டாளர்களும், கூகுளின் ஆண்ட்ராயிட் பயனீட் டாளர்களும் தமது அலைபேசிகளில் இருந்து ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி, அதைச் சார்ந்து இருக்க வைக்க வேண்டும் என்பது ஃபேஸ்புக்கின் விருப்பம்.

2015 வாக்கில், தனி நபர்களின் தொலைபேசி எண் என்பதே மறைந்துவிடும் என்பது எனது அனுமானம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets